Thursday, 11 September 2008
அன்று முதல் இன்று வரை-நொறுக்குத்தீனி அல்லது தின்பண்டங்கள்
தலைப்பே சிரிக்கிற மாதிரி இருக்கா ?
ஆமாங்க சிரிக்கிற அதே சமயம் நம்மள நாமே திரும்பி பாக்குற விஷயம்
பொருட்கள் வேறுபடலாம் ஆனால் எல்லாரும் நினைச்சு மகிழும் பசுமையான நாட்கள் ... இதோ
பள்ளிக்கூடங்களில் ஆரம்ப பள்ளி வயதில்
இடைவேளை நேரங்கள் அல்லது மாலை நேரங்களில் பெரும்பாலும் விரும்பிய பதார்த்தங்கள்
ஆரஞ்சு மிட்டாய் குச்சி ஐஸ் , சூரம் பழம்,தேன் மிட்டாய்,இலந்தை வடை,நெல்லிக்காய், சோள கதிர்(மக்கா சோளம்)
(சோள தட்டைய வச்சு கிரிக்கெட் விளையாடுறது வேற கதை)
இன்னும் நிறைய இருக்கு
மதியம் வீட்டுக்கு பறந்து(மனசுக்குள்ளயே) போய் மதியான சாப்பாடு
திரும்பி வரப்போ அம்மாகிட்ட வாங்குற கால் ரூபா அல்லது பத்து பைசாஅதுல தான் எவ்வளோ வாங்கினோம் !
இப்போ என்னடானா பணவீக்கம் அப்டின்குறான்
பை நிறைய பணம் கொண்டு போனாலும்
ஒரு கை நிறைய கூட வாங்க முடியல ?
எவ்வளோ மாறிட்டோம் இல்லாட்டி மாறிடுச்சு !
அப்புறம் நடுநிலை பள்ளி வயதில் (இது நடக்குது மதுரைல ங்கோ)
அதே சோள கதிர் !
குச்சி ஐஸ் மாறி இப்போ கப் ஐஸ் அப்புறம் பெப்சி ஐஸ்
இப்போ தான் ஒரு முக்கியமான இடம் வருது-மதியான சாப்பாடு
காலைல சோத்து டப்பா ல திணிச்சு கொடு வர்ற இட்லி/தோசை இல்லாட்டி பழைய சோறு எல்லாம் பறந்துடும் கொஞ்ச நேரத்துலையே(நண்பர்கள் மத்தியில்)
அவ்வப்போது வகுப்பு நேரங்களிலும்(திருட்டு தனமாத்தான்-மாட்டிக்கிட்டதும் உண்டு)
அப்புறம் தான் கூட்டாஞ்சோறு ....அப்பப்பா எத்தனை வீட்டு சாப்பாடு? ஏழை,பணக்காரன்,ஜாதி அப்டிங்கற எந்த கருமாந்திரமும் பார்த்தது இல்ல. அமிர்தம் தான் போங்க !
அப்ப அப்போ சத்துணவு வேற
நினைத்தாலே கண்கள் ஆனந்தத்தில் குளமாகும் பள்ளிக்கூட பசுமைகள் ஒவ்வொருத்தரும் எவ்வளோ மகிழ்ச்சியா இருந்திருக்கோம் இல்ல ?
எத்தனை நண்பர்கள்,எவ்வளோ பாசம், நட்பு,அடிதடி ?
சரி அடுத்து பாத்தோம்னா மேல்நிலை பள்ளி வாழ்க்கைங்கோ
ஆனால் இங்கே விடுதி வாசமுங்கோ
அதனால் வார விடுமுறை நாட்கள் தானுங்க சொர்கமே
ஏன் அப்டினா அப்போ தான் எல்லார் வீட்ல இருந்தும் அப்பா,அம்மா பார்க்க வருவாங்க
அதுல பார்த்தா முதல காராசேவு தான் அத தான் பசங்க வாரம் வச்சு சாப்பிட முடியும் பள்ளி கூடத்துல விக்கிற முறுக்கு ரொம்ப நல்லா இருக்கும்இங்கே தினமும் வந்து செல்லும் மாணவ நண்பர்கள் தான் பெரிய வரமே !
விடுதி சாப்பாடு சாப்டுட்டு நாக்கு செத்து போய் இருக்கிறப்போ எங்களுக்கெல்லாம் கிடைக்குற பெரிய ஆறுதல் !
இங்கேயும் ஜாதி,மதம்,பணம் எதுவும் பார்த்தது இல்ல
விடுதில இருந்து விடுமுறைக்கு வீட்டுக்கு போறப்போ எதோ பாலைவன சோலை மாதிரி தான் நாளைக்கு கிடைக்காதே அப்டின்னு நினைச்சு நினச்சே எல்லாத்தையும் வெளுத்து வாங்குறது,
வீட்லயும் புள்ள பாவம் அப்டின்னு கேக்குறது கேட்காதது எல்லாமே கிடைக்கும் வீட்ல இருந்து வந்ததும் எல்லாரும் அவனவன் கொண்டு வந்ததை பகிர்ந்து சாப்டறது அருமை !
இப்போ கல்லூரி ...
கான்டீன்-இடைவேளைகளின் இன்பலோகம்
டீ,பப்ஸ்,பூரி போன்ற வகையறாக்கள் மாலை சுட சுட வடை அப்புறம் விடுதி டீ !
இப்போ வேலை பாக்குற பெங்களூருல
கவர்ச்சிகரமா,சுகாதாரமா அடைக்கப்பட்ட அந்நிய நாட்டு பதார்த்தங்கள்
தேன் மிட்டாயும் இன்ன பிற வஸ்துக்களும் வழக்கொழிந்து போயிருச்சு ஆனாலும் நான் ஊருக்கு போனால் தேன் மிட்டாய் கொண்டு வர சொல்லுறாங்க நண்பர்கள் !!!
பிட்சா,பர்கர் அப்டின்னு வெள்ளைக்காரன் கோடி பேர் வந்தாலும் அடி மனசுல எல்லாரும் இன்னும் அந்த பள்ளிக்கூட நாட்களையும் அப்புறம் அந்த தீனிகளையும் நினைச்சு ஆனந்த படுறத மறுக்கவோ மறைக்கவோ முடியாது
அடுத்த அன்று முதல் இன்று வரை ல சந்திக்கலாம் !!!