Saturday, 30 August 2008
ஈழத்து சகோதரர்களின் எதிர்பார்ப்பு
காலங்கள் மாறும் காட்சிகள் மாறும் என்பார்கள்
மாறும் காட்சிகளும் முந்தியதை விஞ்சியே நிற்கின்றன
புயலுக்கு பின்னும் புயலே அடித்து கொண்டிருந்தால்
என்ன செய்வது ...
வாழ்வென்பது வாழத்தான் என்பது பொய்யாகி
அழுவதற்கு என்றாகி போனதே !
அழுதழுது கண்ணீர் சுரப்பிகளும் வற்றிவிட்டனவே
எம் சந்ததிக்கு சிரிப்பென்பதே தெரியாமல் போனதே
மகிழ்ச்சி என்பது கானல் நீர்தானோ
வசந்தம் வரவேண்டும்,வாழ்வை தரவேண்டும்
தருவானா அந்த வல்லான்
நம்பிக்கையுடன் நொடிகளை நகர்த்துகிறோம்
கந்தக வாசத்தையும் சத்தத்தையும் தொலைக்கும் காலத்தை நோக்கி நடக்கிறோம்
எம் நிலத்தில் யாம் மகிழ்ந்துகுலாவும் நாள் வருமென்ற நம்பிக்கையில்
நல்ல முடிவென்று ஒன்று உள்ளதென்ற நம்பிக்கையில்.